Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, December 22, 2012

வாழ்வு ஓர் கனவு!


வாழ்வு ஓர் கனவு!

வாழ்வு ஓர் கனவு!

"உலகெலாமோர் பெருங்கனவு அஃதுளே
     உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
 கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
     கனவினும் கனவாகும் இதனிடை
 சிலதினங்கள் உயிர்க்கு அமுதாகிய‌
     செப்புதற்கரிதாக மயக்குமால்
 திலத வாணுதலார் தரு மையலாம்
     தெய்விகக் கனவன்னது வாழ்வே."

பாரதியின் இந்தக் கருத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது பட்டினத்தாரின் பாடல்: "பொய்யாய் பழங்கதையாய் மெல்லப் போனதுவே".

காந்திமதிநாதரும் மகாகவியும்


                                           காந்திமதிநாதரும்   மகாகவியும்

எட்டயபுரம் சமஸ்தானத்தில் காந்திமதிநாதன் என்பார் தமிழ்ப் புலவர். பாரதியினும் வயதில் மூத்தவர். மன்னர் அவையில் பாரதியின் புலமையைச் சோதித்துக் கொண்டு அவரை ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச் சொன்னார்கள். காந்திமதிநாதன் "பாரதி சின்னப் பயல் ," எனும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னார். அதில் பாரதியை ஏளனம் செய்யும் நோக்கமும் இருந்திருக்கிறது. பாரதி உடனே பாடினார்.

"ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்
 ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் ‍ மாண்பற்ற‌
 காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
 பாரதி சின்னப் பயல்"

"காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்" எனும் பொருள்படும்படி அமைந்தது இந்தப் பாடல். உடனே வயதில் மூத்தவரை அப்படி ஏளனம் செய்தது தவறு என்றுணர்ந்து பாரதி, மறுபடி பாடலை மாற்றிப் பாடினார். எப்படி?

"ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்
 ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌
 காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
 பாரதி சின்னப் பயல்"

வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். அதுதான் பண்பாடு.

வயதில் மூத்த காந்திமதிநாதனை பாரதி அவமதித்து அவரைச் சின்னப் பயல் என்று பாடிவிட்டார் எனும் செய்தியை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்கள், உடனே அவன் மாற்றிப் பாடி அவரைப் பெருமைப் படுத்தியதையும் எடுத்துரைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

You can send your comments